பதிவு:2022-09-07 22:06:05
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது இயந்திரத்தில் சிக்கி 3 விரல்கள் துண்டானதால் சக ஊழியர்கள் அதிர்ச்சி :
திருவள்ளூர் செப் 07 : திருவள்ளூர் அடுத்த திருவலாங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு கரும்பு அரவைக்கு பதிவு செய்யுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதையடுத்து சர்க்கரை ஆலையில் 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட உள்ளது. இதற்காக இந்திரத்தை சுத்தம் செய்யும் பணியை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிவாவின் கைவிரல்கள் இயந்திரத்தில் சிக்கியது. இதனால் மூன்று விரல்கள் துண்டானதால் ஊழியர் சிவா துடித்துப் போனார். இதனைக் கண்ட சக ஊழியர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதனால் சக ஊழியர்கள் சிவாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.விரல்கள் துண்டாகியதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிவா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.