திருவள்ளூரில் உள்ள அருள்மிகு வேம்புலி அம்மன் திருக்கோவில் ஜாத்திரை உற்சவ விழா

பதிவு:2022-09-12 20:21:23



திருவள்ளூரில் உள்ள அருள்மிகு வேம்புலி அம்மன் திருக்கோவில் ஜாத்திரை உற்சவ விழா

திருவள்ளூரில் உள்ள அருள்மிகு வேம்புலி அம்மன் திருக்கோவில் ஜாத்திரை உற்சவ விழா

:திருவள்ளூரில் உள்ள ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாகிய ஸ்ரீ வேம்புலி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் யாத்திரை உற்சவம் கடந்த 2-ந் தேதி தொடங்கியது.முதல் நாளில் அபிஷேகம் மற்றும் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சியுடன் தொடங்கி, 3-ஆம் தேதி சனிக்கிழமை அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நாள்தோறும் அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து விழாவின் இறுதி நாளான நேற்று காலை புஷ்ப அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர். இரவு 10 மணிக்கு மேல் கோயிலில் இருந்து புஷ்ப அலங்காரத்துடன் புறப்பட்ட வேம்புலி அம்மன் காக்களூர் சாலை, குளக்கரை சாலை, பஜார் வீதி முகம்மது அலி தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற வீதி உலாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து தெருக்களிலும் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர்.

இந்த ஜாத்திரை விழாவை முன்னிட்டு சிறப்பு தாரை தப்பட்டை, திருப்பதி பேண்ட் வாத்தியம் மற்றும் வானவேடிக்கையும் பொய்க்கால் குதிரை நையாண்டி மேளம் கரகாட்டம், கேரள செண்டை மேளம் காஞ்சி கைச்சிலம்புடன் ஜாத்திரை விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருவிழா குழு அருள்மிகு வேம்புலி அம்மன் சேவா சங்கம் மற்றும் கிராமத்தார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.