பதிவு:2022-09-20 19:41:27
மாத ஓய்வூதியம் தடைப்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட கருவூல அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் நேர்காணலை முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல் :
திருவள்ளூர் செப் 20 : திருவள்ளுர் மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் வழியாக ஓய்வூதியம் பெற்று வரும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்கள் ஜுலை மாதம் முதல் தேதியிலிருந்து இதுநாள் வரை நேர்காணல் செய்து வருகின்றனர்.
அரசாணை எண். 136 நிதித்துறை (ஓய்வூதியம்) அறிவிப்பின்படி ஓய்வூதியர்கள் ஜீவன் பிரமான் இணையதள மின்னணு மூலமாக அல்லது இந்திய அஞ்சல் துறையின் மூலமாகவோ அல்லது கருவூலங்களுக்கு நேரில் சென்றோ வாழ்நாள் சான்றிதழ் மூலமோ நேர்காணல் செய்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டக் கருவூல அலகில் உள்ள மொத்த ஓய்வூதியதாரர்கள் 25082 பேரில் 14.09.2022 வரை 18106 ஓய்வூதியதாரர்கள் நேர்காணலை முடித்துள்ளனர். மீதமுள்ள 6976 ஓய்வூதியதாரர்கள் நேர்காணல் செய்யாமல் உள்ளனர்.
மேலும், நேர்காணலை முடிக்காமல் இருக்கும் ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியம் தடைப்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட கருவூல அலுவலகத்தை தொடர்பு கொண்டு வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் நேர்காணலை முடிக்குமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களின் செல் எண்ணையும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதன்படி மாவட்ட கருவூலம், திருவள்ளுர் 9566076082, சார் கருவூலம் அம்பத்தூர் 9551634992, சார் கருவூலம் ஆவடி 8190872590, சார் கருவூலம் கும்மிடிப்பூண்டி 9629418704. சார் கருவூலம் பள்ளிப்பட்டு 8667488388, சார் கருவூலம் பூந்தமல்லி 9940102146, சார் கருவூலம் திருத்தணி 9865481266, சார் கருவூலம் பொன்னேரி 9787697632, சார்கருவூலம், திருவள்ளுர் 9444474062, சார் கருவூலம் ஊத்துக்கோட்டை 9489127875 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு நேர்காணலை முடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.