திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரிடம் ரூ. 2 லட்சம் நூதன முறையில் கொள்ளை

பதிவு:2022-10-09 18:53:29



திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரிடம் ரூ. 2 லட்சம் நூதன முறையில் கொள்ளை

திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரிடம் ரூ. 2 லட்சம் நூதன முறையில் கொள்ளை

திருவள்ளூர் அக் 08 : திருவள்ளூர் அடுத்த புதுச்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் முருகேசன் (56) . இவர் சொந்தமாக லாரி வைத்துக் கொண்டு தானே ஓட்டியும் வந்துள்ளார். ஆனால் இவருக்கு கடந்த மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து காரணமாக வெளியில் எங்கும் செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று திருமழிசையில் உள்ள தனியார் வங்கியிலிருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு அதை தனது பையில் வைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். இந்நிலையில் வங்கியிலிருந்து சிறிது தூரத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், முருகேசனிடம் பணம் கீழே விழுந்ததாக கூறியுள்ளனர்.

இதனால் இரு சக்கர வாகனத்தை நிறுத்தவிட்டு பின்னால் திரும்பி பார்த்த போது முருகேசன் வங்கியிலிருந்து எடுத்து வந்த ரூ. 2 லட்சம் பணத்தை பையில் போட்டு வைத்திருந்ததை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய பகுதியில் உள்ள சிசிடிவி காமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கியிலிருந்து ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு அதை பையில் வைத்து அதனை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்வதை நோட்டமிட்டு, பணம் கீழே விழுந்ததாக சொல்லி நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை வெள்ளவேடு போலீசார் தேடி வருகின்றனர்.