திருவாலங்காடு ஒன்றியக் குழு சாதாரண கூட்டத்தில் இருந்து தொழிற்சாலை கட்டட கூடுதல் வரைபட அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய குழு துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த சுஜாதா உட்பட 6 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பதிவு:2022-10-13 16:26:42



திருவாலங்காடு ஒன்றியக் குழு சாதாரண கூட்டத்தில் இருந்து தொழிற்சாலை கட்டட கூடுதல் வரைபட அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய குழு துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த சுஜாதா உட்பட 6 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருவாலங்காடு ஒன்றியக் குழு சாதாரண கூட்டத்தில் இருந்து தொழிற்சாலை கட்டட கூடுதல் வரைபட அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய குழு துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த சுஜாதா உட்பட 6 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருவள்ளூர் அக் 13 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் அதிமுகவைச் சேர்ந்த ஜீவா தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் மன்றப் பொருள் வாசிக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற திமுக கவுன்சிலர் தினகரன் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உயர்மின் கோபுரம் பழுதடைந்து 2 மாதங்களாக மின்விளக்கு எரியவில்லை. அதிகாரிகள் அதனை சரி செய்ய வேண்டும்.‌

அதேபோல் திருவலாங்காடு ஒன்றியத்தில் இயங்கி வரும் அம்மா சிமெண்ட் விற்பனை மையத்தில் பணிபுரிபவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், அவர்கள் முறையான பதிவேடுகளை பராமரிப்பது இல்லை என குற்றச்சாட்டு தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி அம்மா சிமெண்ட் விற்பனை மையத்தில் ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தார். திருவலாங்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்பாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலைக்கு கூடுதல் கட்டட வரைபட அனுமதி மற்றும் தொழில் உரிமம் அனுமதி வழங்கக்கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு திமுக கவுன்சிலர் தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஒன்றிய அதிகாரிகள் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதற்கு ஒன்றிய குழு தலைவர் ஜீவா ஏற்கனவே முறையாக ஆய்வு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆய்வு தேவையற்றது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஒன்றியக் குழுதலைவரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர் தினகரன் வேண்டுமென்றே கூட்டத்திலிருந்து வெளியேறினார். அவருடன் திமுகவைச் சேர்ந்த ஒன்றிய குழு துணை தலைவர் சுஜாதா உட்பட 6 கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

ஒன்றியக் குழு கூட்டத்தில் தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தி தலைவர் முறையான பதில் அளித்தும் திமுகவைச் சேர்ந்த ஒன்றிய குழு துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.