சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில் திருவள்ளூரை 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதால் பாதுகாப்பு படை போலீசார் தீவிர பாதுகாப்பு

பதிவு:2022-11-07 12:55:11



சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில் திருவள்ளூரை 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதால் பாதுகாப்பு படை போலீசார் தீவிர பாதுகாப்பு

சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில் திருவள்ளூரை 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதால் பாதுகாப்பு படை போலீசார் தீவிர பாதுகாப்பு

திருவள்ளூர் நவ 07 : பாரதப் பிரதமரின் கனவு திட்டமான வந்தே பாரத் ரயில் திட்டத்தின்படி ஐந்தாவது ரயில் சேவை இன்று தொடங்கியது. கடந்த 2019 டெல்லியில் இருந்து வாரணாசி வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள 75 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. சென்னை ஐ. சி. எப்.ரயில் பெட்டி தொழிற்சாலையில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் செல்லும்போது வழக்கமாக மற்ற ரயில்களில் செல்லும் நேரத்தை விட மிக குறைந்த நேரத்தில் சென்று சேர முடியும். இந்த ரயிலில் 180 டிகிரி அளவுக்கு சுழலும் இருக்கை வசதி உள்ளது 34 இன்ச் எல் சி டி டிவியும் பொருத்தப்பட்டுள்ளது. ரயில் பாதையில் நான் ஒரு மில்லி மீட்டர் முதல் 650 மில்லி மீட்டர் வரை தண்ணீர் இருந்தாலும் இந்த ரயில் எளிதில் கடந்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.‌ இந்நிலையில் தென்னிந்தியாவில் முதல்முறையாக இந்த ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து திருவள்ளூர் அரக்கோணம் பெங்களூர் வழியாக மைசூரை சென்றடையும் ரயிலை இன்று காலை 5 50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 6.35 மணிக்கு திருவள்ளூரை அதி வேகமாக கடந்து சென்றது. 160 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் செல்வதால் ரயில் பயணிகள் இருப்பு பாதையை கடக்காதவாறு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மற்ற ரயில்களில் செல்வதற்காக காத்திருந்த பயணிகள் இந்த ரயிலை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.