பதிவு:2022-11-09 08:40:10
திருவள்ளூர் நகரின் முக்கிய சாலையில் பைக்கை லாவகமாக திருடிய டிப்டாப் திருடன் : கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை :
திருவள்ளூர் நவ 08 : திருவள்ளூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல யாஸ்மின் துணிக்கடையில் நம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருள் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் டிஎன் 20 டிஏ 554 என்ற பதிவு எண் கொண்ட பல்சர் இருசக்கர வாகனத்தில் புத்தாடை வாங்குவதற்காக வந்து துணிக்கடையின் முன் வாகனத்தை நிறுத்திவிட்டு புத்தாடை எடுக்க சென்றுள்ளார். பின்னர் புத்தாடை வாங்கிக்கொண்டு வெளியே வந்து பார்த்த அருள் தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து தனது இருசக்கர வாகனத்தை துணிக்கடை அருகே தேடியும் கிடைக்காததால் துணிக்கடையில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது கருப்பு நிற பேண்ட் சிவப்பு நிற சட்டை அணிந்து டிப்டாப்பாக வந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.தனது வாகனம் திருடு போன சம்பவம் குறித்து அருள் அளித்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் நகர போலீசார் பைக்கை லாபகமாக திருடி சென்ற டிப்டாப் திருடன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான திருவள்ளூர் தேரடியில் அமைந்துள்ள துணிக்கடை அருகே பைக் திருடு போன சம்பவம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.