திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் அதிமுக பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பி.மணி அவர்களின் மகன் திருமண விழாவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேரில் வாழ்த்து

பதிவு:2022-11-11 11:55:14



திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் அதிமுக பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பி.மணி அவர்களின் மகன் திருமண விழாவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேரில் வாழ்த்து

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் அதிமுக பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பி.மணி அவர்களின் மகன் திருமண விழாவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேரில் வாழ்த்து

திருவள்ளூர் நவ 11 : திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பி.மணி- பூங்காவனம் தம்பதியினரின்மகன் கலைச்செல்வன் (எ) சத்யாவுக்கும் தே.ஸ்ரீபிரியாவுக்கும் திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி நேரில் வாழ்த்து தெரிவிக்க வருகை தந்தார். அவருக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

அதனையடுத்து மணமக்களை ஆசீர்வதித்த அவர் கூறியிருந்த தொண்டர்களிடம் உற்சாகமாக கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.இதில் முன்னாள் அமைச்சர்கள் பா.பென்ஜமின், பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்பி யுமான திருத்தணி கோ.ஹரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுணியம் பலராமன், என்.எஸ்.ஏ மணிமாறன் உள்ளிட்ட அதிமுக மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.