திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேம்பாலத்தில் ஏணியை அமைத்து அதன் மூலம் மேலே ஏறி ஆபத்தான முறையில் பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள்

பதிவு:2022-11-17 23:10:17



திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேம்பாலத்தில் ஏணியை அமைத்து அதன் மூலம் மேலே ஏறி ஆபத்தான முறையில் பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள்

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேம்பாலத்தில் ஏணியை அமைத்து அதன் மூலம் மேலே ஏறி  ஆபத்தான முறையில் பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள்

திருவள்ளூர் நவ 17 : வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்தது. இதனால் திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேல்விளாகம் ,கலியனூர் கலியனூர் காலனி, மணவூர்,நெமிலியகரம், குப்பம் கண்டிகை,, இராஜபத்மாபுரம் , மருதவல்லிபுரம், ஜாகிர் மங்கலம், பழையனூர், காபுல் கண்டிகை, உள்ளிட்ட 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விடையூர்- கலியனூரை இணைக்கும் வகையில் கடந்த 2016- 2017 ஆம் ஆண்டு ரூ.3 கோடி 60 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலப்பணி ஆடசி மாற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் விடையூர் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பாலத்தில் அமைத்துள்ள ஏணியில் ஏறி ஆபத்தான முறையில் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் பருவமழை காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 13 கிராமங்கள் துண்டிக்கப்படுவதும் மாணவர்கள் பொதுமக்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இத்தகைய அவல நிலையை போக்க மேம்பால கட்டுமானப் பணிகளை விடியா திமுக அரசு விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.