பதிவு:2022-12-03 21:05:59
மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரிகள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள வழிகாட்டி நெறிமுறைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் டிச 03 : மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டி தேர்வில் கலந்துகொள்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது :
மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரிகள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள பயனாளி மீனவ சமுதாயத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்,பயனாளியின் பெற்றோர்,பாதுகாப்பாளர் மீனவ கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்,பயனாளியின் பெற்றோர்,பாதுகாப்பாளர் மீனவர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.பயனாளியின் வயது 01.08.2023-ல் உள்ளபடி 21 வயது முதல் 32 வயது வரையில் இருக்க வேண்டும்.
பயனாளி மிகவும் பிற்படுத்தப்பட்ட இனமாக இருந்தால் வயது வரம்பு 35 வயது வரையிலும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் இனமாக இருந்தால் வயது வரம்பு 37 வயது வரையிலும், மாற்றுத்திறனாளியாக இருப்பின் வயது வரம்பு 42 வயது வரையிலும் இருக்கலாம்.
பயனாளி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளநிலை பட்டபடிப்பு பயின்று இருக்க வேண்டும். பயனாளி பள்ளி கல்வியில் (பன்னிரெண்டாம் வகுப்பில் 960/1200 மதிப்பெண்-க்கு மேல்) 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.பயனாளி படிப்பு முடித்து வேறு பணிகளில் பணிபுரிந்து வந்தாலும் தகுதியிருப்பின் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான ஆயத்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
இப்பயிற்சிக்கான விண்ணப்ப படிவங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.