திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று ஊதா நிறத்தில் ஒளி ஊட்டப்படும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2022-12-03 21:08:22



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று ஊதா நிறத்தில் ஒளி ஊட்டப்படும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று ஊதா நிறத்தில் ஒளி ஊட்டப்படும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் டிச 03 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று ஊதா நிறத்தில் ஒளி ஊட்டப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் பொது சபை கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவித்தது.

இதனை வெகு மக்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு அந்நாளில் ஊதா நிறத்தில் முக்கிய கட்டிடங்களில் ஒளி ஊட்டி பிற நாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் இத்தகைய நிகழ்வின் மூலம் கொண்டு செல்ல இயலும்.

இந்தியாவின் முதல் முறையாக நமது தமிழ்நாட்டிலும் இவ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று தமிழ்நாடு அரசின் அனைத்து முக்கிய அலுவலகங்களையும் ஊதா நிறத்தில் ஒளியூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஊதா நிறத்தில் ஒளி ஊட்டப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.