திருவள்ளூர் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் அரசு உதவி பெறும் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு :

பதிவு:2022-12-03 21:38:42



திருவள்ளூர் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் அரசு உதவி பெறும் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு :

திருவள்ளூர் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் அரசு உதவி பெறும் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு  :

திருவள்ளூர் டிச 03 : திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் அமைந்திருக்கும் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து சார்பில் பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கென்னடி தலைமை தாங்கினார். உங்கள் பாதுகாப்பு டிரஸ்ட்-ன் தமிழக ஒருங்கிணைப்பாளர் ஆகப் ராஜா, திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாளையம் , வழக்கறிஞர் அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஜி.மோகன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது கார்களில் செல்லும் போது அனைவரும் கட்டாயம் ஷீட் பெல்ட் அணிய வேண்டும். குழந்தைகளும் அவர்களுக்குரிய சீட் பெல்ட் டை அணிந்து பயணிக்க வேண்டும்.

இருசக்கர வாகனம் மற்றும் கார், போன்ற வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் செல்போன் பயன்படுத்த கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போது அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதால் கட்டாயம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அதே நேரத்தில் இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

நீங்கள் வாகனத்தை ஓட்டும் போது அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும். உங்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வாகனத்தை ஓட்டும் பொழுது அரசு விதிமுறை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு திருவள்ளூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஜி.மோகன் மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.