திருவள்ளூரில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார் :

பதிவு:2022-12-04 17:09:47



திருவள்ளூரில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார் :

திருவள்ளூரில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார் :

திருவள்ளூர் டிச 03 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. :

திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதி வரை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவை ஊதா நிறத்திலான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக சிறப்பு பள்ளிகளில் பயிலும் 50 மாற்றுத்திறன் கொண்ட சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளோடு மாவட்ட ஆட்சியர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தால் தயார் செய்யப்பட்ட பெரிய கேக்கினை அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பகிர்ந்தளிக்கும் விதமாக சிற்பபு பளளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட சிறப்பு குழந்தைகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். :

தொடர்ந்து, அந்த சிறப்பு குழந்தைகளும் மாவட்ட ஆட்சியர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட சிறப்பு குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இனிப்புகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். :

தொடர்ந்து, சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகளின் இசை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு, அவர்களின் திறமையை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்காக மாநில அளவில் நடைபெற்ற தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கம், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளுடன் ஆட்சியர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். :

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ள, பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து, துவக்கி வைத்து, அப்பிரச்சார வாகனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ள கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, அக்கலை குழுவினரை பாராட்டினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலததுறை சார்பாக அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான துண்டு பிரசுரங்களை ஆட்சியர் பொதுமக்களுக்கு வழங்கினார். :

இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, முட நீக்கு வல்லுநர் ஆஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள், மாற்றுத்திறன் கொண்டோருக்கான சிறப்பு பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.