திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 212 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :

பதிவு:2022-12-27 17:55:04



திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 212 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :

திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 212 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :

திருவள்ளூர் டிச 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 72 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 46 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 15 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 27 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 52 மனுக்களும் என மொத்தம் 212 மனுக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன் பெற்றுக் கொண்டார்.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தேவையான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் மதுசூதனன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.