பதிவு:2024-06-22 12:09:15
திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூரில் 7 மணி நேரம் பள்ளிப்பட்டு (பொறுப்பு) சார்பதிவாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் வங்கி கணக்கு உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் :
திருவள்ளூர் ஜூன் 22 : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு (பொறுப்பு) சார் பதிவாளராக பணியாற்றி வந்த மோகன்ராஜின் சம்பந்தப்பட்ட சொகுசு காரில் நேற்று முன்தினம் 20-ஆம் தேதி இரவு கணக்கில் வராத ரூ. 11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து 21-ஆம் தேதி காலை 8 மணி முதல் திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு (பொறுப்பு) சார்பதிவாளர் மோகன்ராஜ் வீட்டில் டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி, இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையானது மதியம் 3 மணி அளவில் நிறைவடைந்தது. அதனையடுத்து வெளியே வந்த அதிகாரிகளிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பள்ளிப்பட்டு பகுதியில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ. 11 லட்சம் கைப்பற்றப்பட்டது . அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் வங்கி கணக்கு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட (பொறுப்பு) சார்பதிவாளர் மோகன்ராஜ் என்பவர் மீது தொடர்ந்து புகார் வந்ததன் அடிப்படையில் சோதனை நடைபெற்றது . கணக்கில் வராத ரூ.11 லட்சம் செய்யப்பட்டதால் துறை ரீதியான விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.